Link to home pageLanguagesLink to all Bible versions on this site

1 நாளாகமம்
ஆசிரியர்
1. நாளாகமம் புத்தகத்தின் ஆசிரியர் யார் என்று தெளிவாக குறிக்கப்படவில்லை. ஆனால் வேதபாரகன் எஸ்றா தான் என்று யூத பாரம்பரியம் சொல்லுகிறது. இஸ்ரவேல் குடும்பத்தின் பெயர் அட்டவனையுடன் இந்த புத்தகம் தொடங்குகிறது. பிறகு ஐக்கிய இராஜ்ஜியமாக இருந்த இஸ்ரவேலின் மேல் தாவீது செய்த அரசாட்சியை வர்ணிக்கிறது. பழைய ஏற்பாட்டின் உயர்ந்த நபரான தாவீதின் காரியங்களை அதிவிவரமாக எழுதுகிறது. பண்டைக்காலத்து இஸ்ரவேல் தேசத்தின் மதசம்பந்தமான காரியங்களையும் அரசியல் காரியங்களையும் விவரிக்கிறது.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிமு. 450 க்கும் 400 க்கும். இடையில் எழுதப்பட்டது.
3:19-24, வசனங்களின் அட்டவணையில் தாவீதின் ஆறாவது தலைமுறையிலுள்ள செருபாபேலின் பெயர் குறிக்கப்பட்டிருப்பதால் இந்த புத்தகம் பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தபிறகு எழுதப்பட்டது என்று உறுதியாகிறது.
யாருக்காக எழுதப்பட்டது
பண்டைக்காலத்து யூத ஜனங்களுக்கும் வேதத்தை வாசிக்கிற அனைவருக்கும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
சிறையிருப்புக்கு பிறகு திரும்பி வந்த இஸ்ரவேலர்கள் தேவனை எப்படி ஆராதிக்க வேண்டும் என்று அறிய எழுதப்பட்டது. இஸ்ரவேலின் தெற்கு இராஜ்ஜியமான யூதா, பென்யமின் லேவி கோத்திரங்களின் சரித்திரத்தில் அதிகமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த கோத்திரங்கள் தேவனுக்கு அதிக உண்மையுள்ளவர்களாக காணப்பட்டனர். தாவீதின் வீடும் சிங்காசனமும் என்றைக்கும் இஸ்ரவேலில் நித்தியமாக ஸ்திரப்பட்டிருக்கும் என்று தாவீதோடு செய்த உடன்பட்டிக்கையை தேவன் கனம்பண்ணுகிறதைக் குறிக்கிறது. இதை பூமியின் இராஜாக்கள் செய்யமுடியாது, தேவனே மக்கள் தம்மை ஆராதனை செய்ய தம்முடைய ஆலயத்தை ஸ்திரப்படுத்தினார். பாபிலோனியர்களின் சேனைகள் சாலொமோன் கட்டின தேவாலயத்தை அழித்தார்கள்.
மையக் கருத்து
இஸ்ரவேலின் ஆவிக்குரிய சரித்திரம்
பொருளடக்கம்
1. வம்சவரலாறுகள் — 1:1-9:44
2. சவுல் இராஜாவின் மரணம் — 10:1-14
3. தாவீதின் அபிஷேகமும் இராஜ்ஜியாபாரமும் — 11:1-29:30

அத்தியாயம் 1
ஆதாம் முதல் நோவா வரையுள்ள குடும்ப வரலாறு
1 ஆதாம், சேத், ஏனோஸ், 2 கேனான், மகலாலெயேல், யாரேத், 3 ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு, 4 நோவா, சேம், காம், யாப்பேத்.
யாப்பேத்தின் சந்ததியினர்
5 யாப்பேத்தின் மகன்கள் கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள். 6 கோமருடைய மகன்கள் அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள். 7 யாவானுடைய மகன்கள், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.
காமின் சந்ததியினர்
8 காமின் மகன்கள், கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் என்பவர்கள். 9 கூஷின் மகன்கள், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் மகன்கள், சேபா, திதான் என்பவர்கள். 10 கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பலசாலியானான். 11 மிஸ்ராயிம் லூதீமியர்களையும், ஆனாமியர்களையும், லெகாபீயர்களையும், நப்தூகீயர்களையும், 12 பத்ருசியர்களையும், பெலிஸ்தர்களைப் பெற்ற கஸ்லூகியர்களையும், கப்தொரீயர்களையும் பெற்றான். 13 கானான் தன்னுடைய மூத்தமகனாகிய சீதோனையும், ஏத்தையும், 14 எபூசியர்களையும், எமோரியர்களையும், கிர்காசியர்களையும், 15 ஏவியர்களையும், அர்கீயர்களையும், சீனியர்களையும், 16 அர்வாதியர்களையும், செமாரியர்களையும், ஆமாத்தியர்களையும் பெற்றான்.
சேமின் சந்ததியினர்
17 சேமின் மகன்கள், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசேக் என்பவர்கள். 18 அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான். 19 ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்; ஒருவனுடைய பெயர் பேலேகு, ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பிரிக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான். 20 யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், அசர்மாவேத்தையும், யேராகையும், 21 அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும், 22 ஏபாலையும், அபிமாவேலையும், சேபாவையும், 23 ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும், பெற்றான்; இவர்கள் எல்லோரும் யொக்தானின் மகன்கள். 24 சேம், அர்பக்சாத், சாலா, 25 ஏபேர், பேலேகு, ரெகூ, 26 செரூகு, நாகோர், தேராகு, 27 ஆபிராமாகிய ஆபிரகாம்.
ஆபிரகாமின் குடும்பம்
28 ஆபிரகாமின் மகன்கள், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள்.
ஆகாரின் சந்ததியினர்
29 இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த மகனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம், 30 மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா, 31 யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் மகன்கள்.
கேத்தூராளின் சந்ததியினர்
32 ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற மகன்கள் சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்க்ஷானினுடைய மகன்கள் சேபா, தேதான் என்பவர்கள். 33 மீதியானின் மகன்கள் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லோரும் கேத்தூராளின் மகன்கள்.
சாராளுடைய சந்ததியினர்
34 ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் மகன்கள் ஏசா, இஸ்ரவேல் என்பவர்கள்.
ஏசாவின் மகன்கள்
35 ஏசாவின் மகன்கள் எலிப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள். 36 எலிப்பாசினுடைய மகன்கள் தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு என்பவர்கள். 37 ரெகுவேலினுடைய மகன்கள் நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள்.
ஏதோமிலுள்ள சேயீரின் மக்கள்
38 சேயீரின் மகன்கள் லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், ஏத்சேர், திஷோன் என்பவர்கள். 39 லோத்தான் மகன்கள் ஓரி, ஓமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள். 40 சோபாலின் மகன்கள் அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம் என்பவர்கள்; சிபியோனின் மகன்கள் அயா, ஆனாகு என்பவர்கள். 41 ஆனாகின் மகன்களில் ஒருவன் திஷோன் என்பவன்; திஷோனின் மகன்கள் அம்ராம், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள். 42 திஷானின் மகன்கள் பில்கான், சகவான், யாக்கான் என்பவர்கள்; ஏத்சேரின் மகன்கள் ஊத்ஸ், அரான் என்பவர்கள்.
ஏதோமை அரசாண்ட இராஜாக்கள்
43 இஸ்ரவேலர்களை ஒரு இராஜா ஆளாததற்குமுன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட இராஜாக்கள்: பேயோரின் மகன் பேலா என்பவன்; இவனுடைய பட்டணத்தின் பெயர் தின்காபா. 44 பேலா இறந்தபின்பு போஸ்றா ஊரைச்சேர்ந்த சேராகின் மகன் யோபாப் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான். 45 யோபாப் இறந்தபின்பு, தேமானியர்களுடைய தேசத்தானாகிய ஊஷாம் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான். 46 ஊஷாம் இறந்தபின்பு, பேதாதின் மகன் ஆதாத் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான், இவன் மீதியானியர்களை மோவாபின் நாட்டிலே தோற்கடித்தவன்; இவனுடைய பட்டணத்தின் பெயர் ஆவீத். 47 ஆதாத் இறந்தபின்பு, மஸ்ரேக்கா ஊரைச்சேர்ந்த சம்லா அவன் இருந்த இடத்தில் இராஜாவானான். 48 சம்லா இறந்தபின்பு, நதியோரமான ரெகொபோத்தானாகிய சவுல் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான். 49 சவுல் இறந்தபின்பு, அக்போரின் மகன் பாகாலானான் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான். 50 பாகாலானான் இறந்தபின்பு, ஆதாத் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்; இவனுடைய பட்டணத்தினுடைய பெயர் பாகி; மேசகாபின் மகளாகிய மத்ரேத்தின் மகளான அவனுடைய மனைவியின் பெயர் மெகேதபேல்.
ஏதோமின் பிரபுக்கள்
51 ஆதாத் இறந்தபின்பு, ஏதோமை அரசாண்ட பிரபுக்கள்; திம்னா பிரபு, அல்வா பிரபு, எதேத் பிரபு, 52 அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு, 53 கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு, 54 மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு, இவர்களே ஏதோமின் பிரபுக்கள்.

1 நாளாகமம் 2 ->